5 மனைவிகளை அடமானம் வைத்து சூதாடிய செளதி அரேபியா இளவரசர்

5 மனைவிகளை அடமானம் வைத்து சூதாடிய செளதி அரேபியா இளவரசர்

திரெளபதியை பணயமாக வைத்து சூதாடி தோற்றார் தர்மர் என்று மகாபாரதத்தில் படித்திருக்கின்றோம். ஆனால் செளதி அரேபியாவில் உள்ள ஒரு இளவரர் தனது ஐந்து மனைவிகளையும் வைத்து சூதாடிய சம்பவம் ஒன்’று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சவுதி அரேபியா நாட்டின் இளவரசர் மஜீட் பின் அப்துல்லா என்பவர் சூதாட்டத்திற்கு அடிமையானவர். உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற சூதாட்ட கிளப்புகளுக்கு சூதாடுவது அவரது பொழுதுபோக்குகளில் ஒன்று, இந்த நிலையில் சமீபத்தில் எகிப்து சென்ற அவர் அங்குள்ள சினாய் கிராண்ட் கேசினோ சூதாட்ட விடுதியில் 6 மணி நேரம் சூதாட்டம் ஆடி தோற்றுள்ளார். அதுவும் மில்லியன் கணக்கில் பணத்தை பந்தையம் கட்டி விளையாடியுள்ளார்.

இதனால், பந்தய பணமான 350 பில்லியன் டாலர் பணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் போதிய பணம் இல்லாததால், 25 மில்லியன் டாலர் தொகை பாக்கி வந்துள்ளது. அதைக் கொடுக்க முடியாத நிலையில், தனது 5 மனைவிகளை அந்த விடுதியிலேயே அடமானம் வைத்துவிட்டு சவுதிக்கு தனியே வந்துவிட்டார்.

இப்போது, அவரது மனைவிமாரின் நிலை கேள்விக்குறி ஆகிவிட்டது. செளதி அரச குடும்பத்தினர் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதும் தெரியவில்லை. பணம் கொடுக்காத பட்சத்தில் அவர்களை விரைவில் ஏலத்தில் விற்றுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply