மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை புதிய உத்தரவு

ஜனவரி 31-க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைபடுத்தி 2 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.