சென்னை விஐடியில் உயரும் கொரோனா!!

சென்னை வண்டலூர் விஐடி யூனிவர்சிட்டியில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. அதில் 12 மாணவர்களுக்கும், 13 மாணவிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், போராசியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 74 பேருக்கு தொற்று உறுதியானது.

இன்று மேலும் 45 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 163 ஆக உயர்ந்துள்ளது.