பிரதமரை சந்திக்க விஜயகாந்த் டெல்லி பயணம்.

நாளை காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க இன்று தனது கட்சி எம்.எல்.ஏக்கள் குழுவுடன் விஜயகாந்த் டெல்லி செல்கிறார். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் விஜயகாந்த் மனு கொடுப்பார் என கட்சி வட்டாரங்கள் கூறியுள்ள போதிலும், காங்கிரஸ், தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே அவர் செல்வதாக கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் மேலிட தலைவர்களையும் விஜயகாந்த் குழு சந்திக்க உள்ளது. நேற்றுடன் வேட்பாளர் நேர்காணலை முடித்துவிட்ட விஜயகாந்த், அடுத்தகட்டமாக கூட்டணி குறித்த இறுதி  முடிவை அவர் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அரிவிப்பார் என தெரிகிறது. வேட்பாளர் நேர்காணலில் கூட்டணி குறித்து விஜயகாந்த் கேட்ட கேள்விகளுக்கு காங்கிரஸ் கூட்டணிதான் சிறந்தது என 70% பேர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நாளை பிரதமருடன் நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவுகளை பொறுத்து அடுத்ததாக ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றவர்களை விஜயகாந்த் சந்திப்பாரா? என்பது தெரியவரும்.

Leave a Reply