பீகாரில் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவிக்கு பிரசவம்.

பீகாரில் பிளஸ் 2 தேர்வு எழுதிக்கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு தேர்வு அறையிலேயே குழந்தை பிறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகாரில் தனித்தேர்வு மூலம் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மனிஷா தேவி என்ற 20 வயது பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு பிரசவ வலி வந்ததால், உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் மனிஷாதேவிக்கு வகுப்பறையிலேயே குழந்தை பிறந்தது. தேர்வு அறைக்குள்ளே ஆசிரியைகளும், பெண் உதவியாளர்களும் அவருக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.

Leave a Reply