அனுஷ்காவை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். லிங்குசாமி

lingusamy and anushkaசூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘அஞ்சான்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சிக்கந்தர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத் நகரில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி தான் நடிகை அனுஷ்காவை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி, விழா மேடையை அதிர வைத்தார்.

சூர்யாவின் சமீபத்திய படங்கள் அனைத்தும் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதால், அஞ்சான் படத்தின் தெலுங்கு பதிப்பான சிக்கந்தர் என்ற படமும் அதே நாளில் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சமீபத்தில் ஐதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடத்திய இயக்குனர் லிங்குசாமி, ‘ என்னுடைய படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு காதல் காட்சிகள் வைக்கும்போது, பாடல் காட்சிகள் வைக்கும்போது அனுஷ்காவை மனதில் வைத்தே படமாக்குவேன். என் மனதில் எப்பொழுதும் அனுஷ்காவே ஹீரோயின் என நினைத்துதான் படங்களை இயக்குவேன். இந்த சிக்கந்தர் படத்திலும் அனுஷ்காவை நான் சமந்தா உருவத்தில் பார்த்தேன். அவரை வைத்து இன்னும் ஒரு படம் கூட இயக்கவில்லை என்றாலும், அவர் தான் என்னுடைய அனைத்து படங்களின் கனவு நாயகி என்றார்.

மேலும் இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் அனுஷ்கா நடித்த பாஹுபாலி படத்தை பார்க்க அனுஷ்கா ரசிகன் என்ற முறையில் மிகவும் ஆர்வமுடன் உள்ளதாக கூறினார். லிங்குசாமியின் பேச்சால் விழா மேடையே கலகலத்து போனதுஇந்த விழாவில் கலந்துகொண்ட ஒரு வி.ஐ.பி, விட்டால் நீங்கள் அனுஷ்காவுடன் ரகசியமாக குடும்பமே நடத்திவிடுவீர்கள் போல தெரிகிறதே என்று கூறியவுடன் விழா மேடையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

Leave a Reply