முஸ்லீம்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும். சிவசேனாவின் சர்ச்சை கருத்து

sivasenaகாங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லீம்களுக்கு அதிக சலுகை கொடுத்துள்ளது என்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சிவ சேனா கட்சி தனது அதிகார்பூர்வ பத்திரிகையில் தலையங்க கட்டுரை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா என்ற இதழில் நேற்று வெளியான ஒரு கட்டுரையில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், “சகோதரர் ஒவாய்ஸி அவர்களே. முஸ்லீம் வாக்குகள் விற்கப்படும் வரை அந்தச் சமூகம் பின் தங்கியே இருக்கும். ஆனால், அச்சமூகத்தின் தலைவர்கள் மட்டும் பணக்காரர்களாவர்.

நீங்கள், முஸ்லிம் வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்வதால் உங்கள் சமூகத்துக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்றால்? அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால், வாக்கு வங்கி அரசியல் தேசத்துக்கு கேடு விளைவிக்கும்.

எனவே, வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும். இக்கருத்தை சிவ சேனாவை நிறுவிய பால் தாக்கரேவும் ஆதரித்தார்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிதான் முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர்களுக்கு அதிக சலுகை கொடுத்துள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இக்கட்டுரை மராத்தி மொழியில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply