சன் நெட்வொர்க் உரிமங்களை புதுப்பிக்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்?

sun tvசன் நெட்வொர்க் சானல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள சன் நெட்வொர்க் பங்கு இன்னும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் நெட்வொர்க் உரிமையாளர்கள் பல விதிமீறல்கள் செய்துள்ளதால், சன் டிவி குழும சானல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை, என்று மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் சன் நெட்வொர்க் சானல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சன் டிவி நெட்வொர்க் கொடுத்த அனுபவத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி சானல்களுக்கு உரிமம் வழங்க சில புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், இனிமேல் சாட்டிலைட் சேனல்கள் தங்கள் உரிமத்தை விண்ணப்பிக்கும் போது, கிரிமினல், நிதிமுறைகேடுகள், பயங்கரவாத தொடர்பு, மற்றும் பெரிய நிதிமோசடி, ஆகியவை தொடர்பான வழக்குகள் எதுவும் அவர்கள் பெயரில் நிலுவையில் இல்லை என்று சுய-சான்றிதழ் தீர்மான அறிக்கையை சமர்ப்பித்தால் மட்டுமே உரிமம் புதுப்பிக்கப்படும் என்றும் மத்திய உள்துறைச் செயலர் எல்.சி.கோயல் கூறியுள்ளார். மேலும் தனியார் சானல் உரிமங்களுக்கு 14 புதிய அளவுகோல்களையும் அவர் நிர்ணயித்துள்ளார்.

Leave a Reply