‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் தயாராகிறதா?

indru netru nallaiகடந்த வாரம் வெளியான படங்களில் விஷ்ணு நடித்த ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் தந்து கொண்டிருப்பதால் படக்குழுவினர்களும், விநியோகிஸ்தர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பேய்ப்பட சீசனை தொடங்கி வைத்த சி.வி.குமார், தற்போது டைமிங் மிஷின் சீசனை தொடங்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிக விரைவில் தயாரிக்க உள்ளதாகவும், கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஆர்யா, இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், படம் 2100ஆம் ஆண்டில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என சி.வி.குமார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் நாளிலேயே ரூ.3 கோடி வசூல் செய்த ‘இன்று நேற்று நாளை” திரைப்படம் தற்போது படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply