நடிகர் சங்கத்தில் ரூ.60 கோடி ஊழலா? எஸ்.வி.சேகர் திடுக்கிடும் தகவல்

நடிகர் சங்கத்தில் ரூ.60 கோடி ஊழலா? எஸ்.வி.சேகர் திடுக்கிடும் தகவல்

s.v.sekharதென்னிந்திய நடிகர் சங்கத்தில் சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர்சங்கத்தில் ரூ.60 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி இயல் இசை நாடகம் மன்ற நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலமாக 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போலி உறுப்பினர்களை அதிகமாக சங்கத்தில் சேர்த்துள்ளனர்.

எந்த ஒரு முடிவு என்றாலும் சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தனித்து முடிவுகளை எடுத்துள்ளனர்.  சங்கத்தில்  9 பேர் நிர்வாக குழுவில் இருக்கின்றனர் என்பதை அவர்கள் நினைத்துகூட பார்ப்பதில்லை.

எந்த ஒரு செயல்பாடையும் முறையாக வரைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தனை ஊழல்களையும் மறைப்பதற்காகவே மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிபோடுகிறார்கள்”

இவ்வாறு நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

Leave a Reply