அகர்வாலின் அபார சதத்தால் இந்திய ஏ அணி வெற்றி

அகர்வாலின் அபார சதத்தால் இந்திய ஏ அணி வெற்றி

cricketஇந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் இந்திய ஏ அணியும், தென்னாப்பிரிக்க ஏ அணியும் மோதின

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீ காக் 108 ரன்களும், விலாஸ் 50 ரன்களும் எடுத்தனர்

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர்களின் அதிரடி ஆட்டத்தால் 37.4 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்டு 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் 130 ரன்களும், சாந்த் 90 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய ஏ அணி 5 புள்ளிகள் பெற்றுள்ளது.

இன்று இந்திய ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதி வருகிறது.

Leave a Reply