வெள்ள நிவாரண நிதியாக நடிகை சரோஜாதேவி கொடுத்த ரூ.5 லட்சம்

வெள்ள நிவாரண நிதியாக நடிகை சரோஜாதேவி கொடுத்த ரூ.5 லட்சம்
sarojadevi3
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து ஹீரோயினும், கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படுபவருமான பழம்பெரும் நடிகை சரோஜாதேவி நேற்று தனது 77வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சீனியர் நடிகர்கள் முதல் தற்போதைய இளையதலைமுறை நடிகர்கள் வரை வாழ்த்துக்கள் கூறினர்.

இந்நிலையில் நேற்று நடிகை சரோஜாதேவி நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அவருக்கு நடிகர் சிவகுமார் கேக் ஊட்டி வாழ்த்து கூறினார். சிவகுமாருக்கும் சரோஜாதேவி கேக் ஊட்டினார். இந்த உற்சாகமான பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், மனோபாலா, குட்டிபத்மினி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள காசோலையை சரோஜாதேவி தனது பிறந்தநாள் பரிசாக வழங்கினார். சரோஜாதேவி காலத்தில் சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளமாக நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்களுக்கு மத்தியில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிய சரோஜாதேவி அவர்களுக்கு இணையாக வெள்ள நிவாரண நிதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: Veteran Legendary Actress Saroja Devi has Donated INR ​5 L Cheque for CM relief fund on the occasion of her birthday

sarojadevi7sarojadevi6 sarojadevi5 sarojadevi4  sarojadevi1 sarojadevi sarojadevi 2

Leave a Reply