ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுவருகிறது: அண்ணாமலை

சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலுவான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுவருகிறது என அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துவருகிறது என்றும், முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று முடிந்துள்ளது என்றும் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி எனவும், கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 மாநகராட்சிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.