சென்னை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி. இந்திய ஏ அணி தோல்வி

சென்னை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி. இந்திய ஏ அணி தோல்வி

cricketஇந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் ஏ அணிகளின் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் இந்திய ஏ அணி, ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய ஏ அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. அகர்வால் 61 ரன்கள், பாண்டே 50 ரன்கள் எடுத்தனர்.

259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி, 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பி|ற்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லின் 63 ரன்களும், ஜாம்பா 54 ரன்களும், ஹீட் மற்றும் ஃபெர்கசோன் தலா 45 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஏ அணி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி புள்ளிகள் எதுவும் எடுக்காமலும் உள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவிருப்பதால் அந்த போட்டிகள் முடிந்த பிறகே வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து தெரியவரும்

Leave a Reply