இசையை ரசித்து கேட்ட சிறுவனின் தலையை வெட்டி கொடூர தண்டனை அளித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

இசையயை ரசித்து கேட்ட சிறுவனின் தலையை வெட்டி கொடூர தண்டனை அளித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

isisiஈராக் மற்றும் சிரியா நாடுகளில் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்யம் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் மேற்கத்திய கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனையை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈராக் நாட்டின் மேற்கு மோசூல் என்ற நகரில் 15 வயது சிறுவன் அய்ஹாம் ஹுசைன் என்பவன் சமீபத்தில் மேற்கத்திய இசையை ரசித்து கேட்டுக்கொண்டிருந்ததால் அவனை கைது செய்த தீவிரவாதிகள் அந்த சிறுவனுக்கு ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை அளித்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மோசூல் நகரில் உள்ள பரந்தவெளி திடலில் பொதுமக்கள் முன்னிலையில் சிறுவனின் கண்ணை கட்டி அவனது தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனைக்கு பின்னர் சிறுவனின் உடல் அவனது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply