‘பசங்க 2’ இசையமைப்பாளருக்கு சூர்யா அளித்த இன்ப அதிர்ச்சி

‘பசங்க 2’ இசையமைப்பாளருக்கு சூர்யா அளித்த இன்ப அதிர்ச்சி
arol-caroli
‘பசங்க’ படத்தில் அறிமுகமான இயக்குனர் பாண்டியராஜ் இயகக்த்தில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான ‘பசங்க 2’ திரைப்படம் எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தவரும், தயாரிப்பாளருமாகிய சூர்யா, மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

நேற்று முன்தினம் இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று இந்த படத்தின் இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு தங்க செயின் வழங்கி அசத்தியுள்ளார்.

மேலும் அடுத்த தான் தயாரிக்கவுள்ள படங்களுக்கும் அரோல் கரோலிக்கு வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு அரோல் கரோலியின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டில் ஒரு நடிகராக பெரிய அளவில் சூர்யா ஜொலிக்கவில்லை எனினும் ஒரு தயாரிப்பாளராக ’36 வயதினிலே’ மற்றும் ‘பசங்க 2’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply