ஒரே நாளில் ‘சேதுபதி’ முடிந்தது. ‘தர்மதுரை’ தொடங்கியது.

ஒரே நாளில் ‘சேதுபதி’ முடிந்தது. ‘தர்மதுரை’ தொடங்கியது.
vijaysethupathi
விஜய்சேதுபதி நடித்த முதல் போலீஸ் படமான ‘சேதுபதி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

நானும் ரவுடிதான்’ என்ற வெற்றிப்படத்தை அடுத்து நேற்று விஜய்சேதுபதியின் அடுத்த படமான ‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நேற்றுடன் விஜய்சேதுபதியின் மற்றொரு படமான ‘சேதுபதி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் வரும் பிப்ரவரியில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பீட்சா’ படத்திற்கு பின்னர் ரம்யா நம்பீசன் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளார்.

மதுரையை சுற்றி நடைபெறும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் முழு படப்பிடிப்பையும் மதுரை அருகே ஒரே ஷெட்யூலில் இயக்குனர் அருண்குமார் படத்தை முடித்துவிட்டார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Vijay Sethupathi’s Sethupathi wrapped up

Leave a Reply